காரில் வந்தவர்களுக்கு தர்ம அடி: மக்கள் ஆத்திரம் | Chennai Accident | CCTV
சென்னை வேப்பேரி - பூந்தமல்லி ரோட்டில் மதியம் இன்னோவா கார் ஒன்று வேகமாக சென்றது. முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்தது. பின்னால் டூவிலரில் வந்தவர்கள் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். காருக்குள் இருந்த இரண்டு பேரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சிக்கிய இருவரும் நாங்கள் காரை ஓட்டவில்லை. டிரைவர் தான் ஓட்டி வந்தார் என கூறினார். மக்கள் சுற்றி வளைத்து பிடிக்க வருவது தெரிந்ததும் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார் என்றனர்.
அக் 19, 2024