போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை! | Missile test | Indian Navy
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ராஜ தந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் இந்திய கடற்படை ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
ஏப் 27, 2025