உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செய்தி சுருக்கம் | 08 PM | 23-03-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 23-03-2025 | Short News Round Up | Dinamalar

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடியதால், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய மூவரையும் 1931 மார்ச் 23ல் பிரிட்டீஷ் அரசு தூக்கில் போட்டது. அவர்களின் வீரமரணம் சுதந்திர போராட்டத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. நாட்டின் விடுதலைக்காக வீர மரணம் அடைந்த மூவரையும் நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் மார்ச் 23ல் ஷகீத் திவஸ் என்ற பெயரில் வீரத்தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மூவரின் தியாகம் அளப்பரியது என கூறியுள்ள மோடி, அவர்களின் வீரம், தியாகம் நமக்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !