/ தினமலர் டிவி
/ பொது
/ தொடர் வயிற்று வலியால் துடிதுடித்த சிறுவன் | 11Yrs Old Boy | Suspect Dead | Chennai
தொடர் வயிற்று வலியால் துடிதுடித்த சிறுவன் | 11Yrs Old Boy | Suspect Dead | Chennai
சென்னை, திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 11 வயது மகன் சுதர்சன். திங்களன்று இரவு சுதர்சனுக்கு கடையில் இருந்து புரோட்டா வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின், இரு தினங்களாக சுதர்சன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். திருமுல்லைவாயில் மற்றும் ஆவடி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று திரும்பினான். இன்றும் சிறுவன் தீராத வயிற்று வலியால் துடித்துள்ளான். உடனடியாக திருமுல்லைவாயலில் உள்ள தனியார் ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான். சிறுவன் புரோட்டா சாப்பிட்டு வயிறு வலி ஏற்பட்டு இறந்து போனானா? அல்லது முறையான சிகிச்சை அளிக்காதது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிப் 28, 2025