உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடியே குடியை கெடுத்த கொடூரம் | 2 Months baby Dead| Father Killed | Tirupur

குடியே குடியை கெடுத்த கொடூரம் | 2 Months baby Dead| Father Killed | Tirupur

திருப்பூர், பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன செக்யூரிட்டி. மது பழக்கத்துக்கு அடிமையான மணி, போதையில் தினமும் மனைவி சரோஜினியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பும் இதே போல் தகராறு செய்து மனைவியை அடித்துள்ளார். அப்போது, சரோஜினி கையில் வைத்திருந்த அவரது 2 மாத ஆண் குழந்தை கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. பதறிய சரோஜினி, மருத்துவமனைக்கு தூக்கிகொண்டு சென்றார். சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று இறந்தது. சரோஜினி அளித்த புகாரையடுத்து கணவர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ