டீ பார்ட்டியில் பரஸ்பரம் வரவேற்றுகொண்ட எம்பிக்கள்
பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலும் பங்கேற்றனர். மோடிக்கு அருகே லோக்சபா தலைவர் ஓம்பிர்லா அமர்ந்திருக்க, மோடிக்கு வலதுபுறம் ராகுல் அமர்ந்திருந்தார். ராகுல் அருகே துரை வையாபுரி, அதே வரிசையில் பா.ஜ.,வின் எல்.முருகன் இருந்தார். முன்னதாக, விருந்தில் பங்கேற்க வந்த எம்பிக்கள் ஒருவரை ஒருவர் வரவேற்றுக்கொண்டனர். சில வாரங்களாக பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அனல் பறந்த விவாதங்கள் நடந்தன. மோடி ராகுல் இடையே காரசார வாதம் நடக்க, ராகுல் பேச்சுக்கு அமித்ஷா ஆவேசப்பட பார்லிமென்ட் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் இந்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அளவளாவிய சம்பவம் நடந்தது.