/ தினமலர் டிவி
/ பொது
/ மகளிர் உதவித் தொகை கேட்டு ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம் AAP Protest over Women welfare Scheme | AAP Atishi
மகளிர் உதவித் தொகை கேட்டு ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம் AAP Protest over Women welfare Scheme | AAP Atishi
டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரியில் நடந்து முடிந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்குவோம் என பாஜ உறுதி அளித்தது. தேர்தலில் பாஜ வெற்றி பெற்று டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. முதல் கேபினட் கூட்டத்தில் யமுனையை சுத்தப்படுத்தும் திட்டம், குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு, முந்தைய அரசின் வரவு செலவு கணக்குகளை விளக்கும் சிஏஜி அறிக்கை தாக்கல் உள்ளிட்டவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மார் 04, 2025