உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோலத்தில் கேள்வி எழுப்பிய அதிமுக மகளிரணி! Pongal Kolam | ADMK | Yaar antha sir?

கோலத்தில் கேள்வி எழுப்பிய அதிமுக மகளிரணி! Pongal Kolam | ADMK | Yaar antha sir?

பொங்கல் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைவரும் வீடுகளில் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். பொங்கல் என்றாலே, வீட்டு முன், பல வண்ணங்களில், கோலமிட்டு வாசலை அலங்கரிப்பது வழக்கம். அவ்வகையில் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள, அ.தி.மு.க மகளிர் அணியினர், புதிய பாணியில் பொங்கல் விழாவை கொண்டாடினர். வீட்டின் முன், வழக்கம் போல் பொங்கல் பானை, கரும்பு உருவங்களுடன் கோலமிட்டனர். கோலத்தின் அருகே, யார் அந்த சார்? என்று எழுதி வைத்தனர். ஹேப்பி பொங்கல் என்ற வார்த்தையை காட்டிலும், யார் அந்த சார்? என்ற வாசகங்களை பல வீடுகளின் முன் எழுதி வைத்திருந்தனர்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி