தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கன் சபதம் | Pakistani airstrikes | Paktika province | Afghan
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்ட பகுதிகளில் பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. குறிப்பாக லேமன் உள்ளிட்ட 7 கிராமங்களை குறிவைத்து நேற்றிரவு ஜெட் விமானங்களில் சென்ற பாக். ராணுவத்தினர் சரமாரியாக குண்டுமழை பொழிந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முர்க் பஜார் என்ற கிராமம் முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட பெண்கள், குழந்தைகள் என இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை என்றும், படுகாயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பக்திகா மாகாணத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.