ஆமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு Air India flight | One more body recovered
ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த மருத்துவ கல்லுாரி விடுதி கட்டடத்தில் இருந்தவர்களில் சிலர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆமதாபாத்தில் உள்ள அரசு ஆஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை, டிஎன்ஏ சோதனைக்கு பின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பெரும்பாலான பகுதிகள், தரையில் விழுந்து எரிந்து சாம்பலாகின. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு விமானத்தின் எஞ்சிய பாகங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. விமானத்தின் வால் பகுதி கட்டடத்தின் கூரையில் சொருகியபடி இருந்தது. அதன் சில பாகங்கள் மொட்டை மாடியில் சிதறிக்கிடந்தன. அவற்றை பத்திரமாக அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.