உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை ஓட ஓட அடித்த இந்தியாவுக்கு ஜாக்பாட் india vs pak | akash missile system | Brazil | Brics

பாகிஸ்தானை ஓட ஓட அடித்த இந்தியாவுக்கு ஜாக்பாட் india vs pak | akash missile system | Brazil | Brics

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் வேட்டையாடின. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போரில் குதித்த பாகிஸ்தானை நம் ராணுவம் ஓட, ஓட அடித்தது. அதன் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்களை குண்டு வீசி சிதைத்தது. பாகிஸ்தான் நம் மீது ஏவிய ஏவுகணைகளையும், கொத்து கொத்தாக வந்த ட்ரோன்களையும் நடுவானிலேயே தூள் தூள் ஆக்கியது. இந்தியா அடி கொடுத்ததிலும், பாகிஸ்தான் அடியை நேர்த்தியாக முறியடித்ததிலும் சிறப்பாக செயல்பட்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது. இந்தியா உள் நாட்டிலேயே தயாரித்த ஆயுதங்களுக்கு இப்போது டிமாண்ட் வந்து விட்டது. பல நாடுகள் நம்மிடம் ஆயுதம் கேட்க ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வேண்டும் என்று பிரேசில் கேட்டு இருக்கிறது. கூடவே கடலோர கண்காணிப்பு ரேடார்கள், ரோந்து கப்பல்கள், ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பல்கள், கருடா பீரங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் இந்தியாவிடம் இருந்து வாங்க பிரேசில் முடிவு செய்திருக்கிறது. மோடி தனது 5 நாடு பயணத்தின் முக்கிய அம்சமாக, 5 முதல் 8ம் தேதி வரை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். கூடவே பிரேசில் நாட்டின் தலைவர்களுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது பிரேசிலுக்கு ஆயுதங்கள் விற்பது தொடர்பாக முக்கிய திட்டம் உறுதி செய்யப்படும் என்று நம் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ரஷ்யா நமக்கு தந்த எஸ்-400 ஏவுகணை தடுப்பு சிஸ்டமும், நாமே தயாரித்த ஆகாஷ் ஏவுகணை தடுப்பு சிஸ்டமும் பிரமாதமாக வேலை செய்தன. ஏஐ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் சிஸ்டம் எதிரிகளின் ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை 100 சதவீதம் சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்டது. இதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், தரையில் இருந்து பறந்து சென்று வானில் வரும் எதிரிகளின் ஆயுதங்களை இடைமறித்து துல்லியமாக அழிக்கும். இதில் சக்தி வாய்ந்த ராஜேந்திரா என்னும் ராடார் வசதி உள்ளது. எதிரியின் இலக்கு 180 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் போதே துல்லியமாக கண்டுபிடித்து தகவல் அனுப்பி விடும். மறுகணமே ஏவுகணையை ஏவி அதை தவிடுப்பொடியாக்கும் வேலையை துவங்கும். 25 கிலோ மீட்டர் தூரத்தில் எதிரியின் இலக்கு வரும் போது, அதை சுக்குநூறாக நொறுக்கி விடும். ராணுவத்துக்கும் விமானப்படைக்கும் தனித்தனி ஸ்டைலில் ஆகாஷ் தடுப்பு சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானப்படையிடம் இருக்கும் ஆகாஷ் ஏவுகணை சிஸ்டத்தின் ராடார் 60 கிலோ மீட்டர் ரேடியசை கண்காணிக்கும். ஒரே நேரத்தில் 64 இலக்குகளை குறி வைக்க முடியும். அதே நேரம் ராணுவத்திடம் இருக்கும் ஆகாஷ் சிஸ்டத்தின் ராடார், 100 கிலோ மீட்டர் ரேடியசில் 40 இலக்குகளை குறி வைக்கும் சக்தி கொண்டது. ஆகாஷ் சிஸ்டத்தில் இருந்து பறக்கும் ஏவுகணை சூப்பர் சோனிக் வேகம் கொண்டது. மணிக்கு 4321 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து தாக்க கூடியது. இதன் தாக்கும் திறன் 100 சதவீதம் என்கின்றனர். எதிரி அனுப்பும் எந்த ஆயுதமும் தப்ப முடியாது. எனவே தான் இதை பிரேசில் நாடு விரும்பி கேட்கிறது.

ஜூலை 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

selvaraju
ஜூலை 08, 2025 23:57

வாழ்க பாரதமாதா, வாழ்க மோடிஜி வளர்க BJP.


Chidambaram Senthil Kumar
ஜூலை 07, 2025 04:34

"என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க" என்ற பாடலில் வருவது போல, நமது பாரத தேசமும் தவம் செய்திருக்க வேண்டும், மோடியை போன்றொரு ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவனைப் பெற. பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல் நமக்கு ஒரு நெகட்டிவான விஷயம். அதையே பாசிட்டிவாக மாற்றி யிருக்கிறார் மோடி. வாழ்க மோடி. வாழ்க பாரதம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி