உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளை முடிக்க ஒரே குரலில் கட்சிகள் kashmir pahalgam attack | all party meeting | ind vs pak

பயங்கரவாதிகளை முடிக்க ஒரே குரலில் கட்சிகள் kashmir pahalgam attack | all party meeting | ind vs pak

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவது வழக்கம். அதன்படி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் டில்லியில் கூடியது. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல், திமுக எம்பி திருச்சி சிவா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழுமையாக துணை நிற்போம் என்று எதிர்கட்சிகள் உத்தரவாதம் அளித்தன. அதே போல் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக, பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கான தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியது: நம் நாட்டில் நடந்த பயங்கரவாத செயல்களை பிரதமர் மோடியும், மத்திய அரசும் துளியும் சகித்துக் கொள்ளாது என்பதை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தினோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசுடன் துணை நிற்கவும், எதிர்காலத்தில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாக அனைத்துக் கட்சி தலைவர்களும் உறுதி அளித்தனர் என்று அவர் கூறினார்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி