ISIS தலைவன் அல்பாசித்திடம் NIA துருவி துருவி விசாரணை Alphazid NIA case | ICAMA Sathik | TN ISIS case
ஜனவரி 28ம் தேதி சென்னை புரசைவாக்கம் மற்றும் மயிலாடுதுறையின் திருமுல்லைவாசல் பகுதிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 20 இடங்களில் சல்லடை போட்டனர். இறுதியாக புரசைவாக்கத்தில் அல்பாசித் என்பவனை கைது செய்தனர். அவன் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தான். ஐஎஸ்ஐஎஸ் பிரிவின் தமிழக தலைவனை அவன் தான் என்று தகவல் வெளியானது. அவனது சொந்த ஊர் தான் திருமுல்லைவாசல். முழுக்க முழுக்க அல்பாசித்தை மையப்படுத்தி தான் 20 இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை புரசைவாக்கத்தில் தங்கி இருந்த அல்பாசித், ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தான். அப்படியே ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பெரிய அளவில் ஆள் சேர்க்கும் படலத்திலும் ஈடுபட்டு வந்தான். நிறைய வாட்ஸ்ப் குழு ஆரம்பித்து அதிலேயே மூளைச்சலவை செய்திருக்கிறான். டெலிகிராமிலும் இதே வேலையை பார்த்து இருக்கிறான். கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தான் அல்பாசித் குறிவைத்துள்ளான். அவன் யார் யாரை எல்லாம் மூளை சலைவை செய்தானோ அவர்களையும் தங்கள் ராடாரில் கொண்டு வந்து சோதனை செய்தனர். இதன் தொடர்ச்சியாக சில நாட்கள் கழித்து மற்றொரு பெரிய ரெய்டு நடந்தது.