US-ல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் America | Military flight | deport migrants | India
ராணுவ விமானத்தில் 205 இந்தியர் திருப்பி அனுப்பிய அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் இருந்து 205 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்புவது குறித்து பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து விட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தால் அவர்களை ஏற்போம் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.