நாடுகளிடையே சண்டையை மூட்டிவிடும் அமெரிக்கா: பாக் புகார் America wants war profit from war Pakistan D
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. அப்போது, 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் சொன்னது. அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் சிஎன்என் செய்தியாளர் கேட்டபோது, நீங்கள் சோசியல் மீடியாக்களை பார்க்கவில்லையா? இந்தியாவிலுள்ள சோசியல் மீடியா முழுவதும் இதுதான் முக்கிய செய்தியாக போய்க்கொண்டிருக்கிது என கவாஜா ஆசிப் சொன்னார். நீங்கள் ராணுவ அமைச்சர்; நீங்கள்தான் ஆதாரங்களை தர வேண்டும்; சோசியல் மீடியா பதிவுகளை ஆதாரமாக எடுக்க முடியுமா சார்? என செய்தியாளர் பதிலடி கொடுத்து, அமைச்சர் க்வாஜா ஆசிப் மூக்கை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.