சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் Anbumani support MLAs|TN Assembly|
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபை குழு தலைவராக ஜி.கே.மணி செயல்படுகிறார். அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம் மற்றும் சிவக்குமார் கடந்த செப்டம்பரில் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதம் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதததை கண்டித்து சட்ட சபையில் இருந்து அவர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
அக் 16, 2025