பீஜப்பூர் வனப்பகுதியில் நக்சல்கள் சுற்றி வளைப்பு Anti Naxal Operation | Naxal attack| Chhattisgarh n
சத்தீஸ்கரின் பீஜப்பூரில் தெலங்கானாவை ஒட்டியுள்ள வனப்பகுதியில், நக்கல்களை தேடும் பணியில் சிறப்பு அதிரடிப் படை, சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் மீது நக்சல்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 15 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலர், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் பதுங்கியுள்ள மேலும் சில நக்சல்களை பிடிக்கும் முயற்சியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் பாதுகாப்பு படையினர் செயலாற்றி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். நுாற்றுக்கணக்கானோர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.