அப்பாவு சொன்னதை மறுக்கிறதா ஏஐ தளங்கள்? | Appavu | Best assembly speaker | AI Rejects | TN Assembly
இந்திய சட்டமன்றங்களிலேயே தமிழக சபாநாயகர் அப்பாவுதான் நடுநிலையோடு நேர்மையாக சுதந்திரமாக சபையை நடத்துவதாக செயற்கை நுண்ணறிவு கூறியுள்ளதாக அவர் கூறும் தகவல் சரியா என ஏஐ தளங்களில் கேட்கப்பட்டது. அதற்கு இதுபோன்ற தகவல்களுக்கு ஆதாரமாக ஏஐ தளங்களில் குறிப்புகள் இல்லை என பதில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக சட்டமன்றங்களின் செயல்பாடு, மக்கள் நலனுக்காக அவர்களின் சட்டம் இயற்றும் முறையை அடிப்படையாக கொண்டு ஒப்பீடு செய்யலாம் என சேட் ஜிபிடி தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றம் இந்தியாவில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக நீண்ட அரசியல் பாரம்பரியம், மக்களுக்கேற்ப செயல்படுத்தப்படும் திட்டங்கள், விவாதங்களின் தரம் அடிப்படையில் அது சிறப்பானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.