மத்திய அரசுக்கு டில்லி அரசு கடிதம்! Delhi | Air Pollution | Artificial rain
ஆண்டுதோறும் ஏற்படும் காற்று மாசு பிரச்னை, டில்லியை மீண்டும் தாக்கியுள்ளது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம், அங்கு மிக மிக மோசமாக உள்ளது. காற்றின் தரக் குறியீடு, நேற்று முன்தினம், 484 என்ற நிலையில் இருந்தது. நேற்று 494 என மிகவும் மோசமடைந்தது. அதாவது காற்றின் தரம் 450க்கு அதிகமானால், அது மிக மிக தீவிரம் என்றழைக்கப்படுகிறது. இது குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
நவ 20, 2024