உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடிகளின் குடும்பத்தினரை எச்சரித்த உதவி கமிஷனர் | Chennai police patrol | Rowdys home

ரவுடிகளின் குடும்பத்தினரை எச்சரித்த உதவி கமிஷனர் | Chennai police patrol | Rowdys home

ஒழுங்கா இல்லனா என்கவுன்டர் தான்! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவின் பேரில், கடந்த மூன்று நாட்களாக வட சென்னையில் ரோந்து பணி நடக்கிறது. போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ரோந்து செல்லும் போலீசார், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தினர். திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோ தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்ற உதவி கமிஷனர், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ