/ தினமலர் டிவி
/ பொது
/ அடக்கி வாசிக்கும் நீர்வளத்துறை: பின்னணி என்ன? | Athikadavu-Avinashi | Erode Election
அடக்கி வாசிக்கும் நீர்வளத்துறை: பின்னணி என்ன? | Athikadavu-Avinashi | Erode Election
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் எடுத்து செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்று திட்டத்தை நீர்வளத்துறை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு காளிங்கராயன் அணையில் இருந்து காவிரி உபரிநீரை பம்பிங் செய்து குழாய்கள் மூலமாக 1,045 குளம், குட்டைகளில் நிரப்ப பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 1,030 குளங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய குளங்களில் நீரை நிரப்புவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஜன 30, 2025