அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கும் முன்பே அதிர்ச்சி | Ballot Boxes Fire | USA Election
அமெரிக்காவை பொறுத்தவரை தேர்தல் தேதிக்கு முன்கூட்டியே ஓட்டுபோடும் நடமுறை உள்ளது. கடந்த 26ம் தேதியே ஓட்டு பதிவு தொடங்கிவிட்டது. தேர்தல் நேரத்தில் ஓட்டுபோட முடியாதவர்கள் முன்கூட்டியே ஓட்டு போடலாம். தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஓட்டுபோட்டார். தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் மக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார். வீல்சேரில் ஓட்டளிக்க வந்தவருக்கு உதவி செய்தார் நான் கமலா ஹாரிஸுக்கு ஓட்டு போட்டுள்ளேன். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என பைடன் கூறினார். விறுவிறுப்பாக ஓட்டு பதிவு தொடங்கியுள்ள நிலையில் வாஷிங்டனில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிக்கு மர்ம நபர் தீ வைத்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான ஓட்டுச்சீட்டுகள் எரிந்து நாசமானது. தீ வைத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.