உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் வன்முறை காடானது வங்கதேசம்! பின்னணி என்ன? | bangladesh protests | bangladesh violence news

மீண்டும் வன்முறை காடானது வங்கதேசம்! பின்னணி என்ன? | bangladesh protests | bangladesh violence news

மீண்டும் வெடித்த வன்முறை ஒரே நாளில் 100 பேர் மரணம் நொடிக்கு நொடி பதட்டம் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கம் என்ற பெயரில், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். முதலில் போலீசும், பிறகும் ராணுவமும் இந்தப் போராட்டங்களை தடுக்க முயற்சி செய்தன. இதற்கிடையே போராட்டம் அரசயிலாக மாறியது. முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மாணவர் போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஆளும் அவாமி லீக் குற்றம் சாட்டியது. அதோடு நிற்காமல் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறங்கினர். ஆளுங்கட்சிக்கும், மாணவர்களுக்கும் இடையேயான மோதலாக இந்தப் போராட்டம் உருமாறியது. தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல இடங்களில் நேற்று போராட்டம் வெடித்தது.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை