நகை அடகு வைத்தவர்களை பதறவிட்ட சம்பவம் | Bank | Gold Load
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பொதுத்துறை வங்கி செயல்படுகிறது. சுற்றவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பலர் அவசர தேவைக்காக வங்கியில் நகை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். சமீபத்தில் நகை கடனை திருப்பி செலுத்திய சிலர் அடகு வைத்த நகையை வாங்கியுள்ளனர். அப்போது நகையின் அளவு சிறிதாகவும், சில இடங்களில் சேதம் அடைந்தும் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த மக்கள் தங்கநகை கடையில் கொடுத்து எடை போட்டு பார்த்துள்ளனர்.
ஜூலை 02, 2024