உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 'பந்த்'தில் பாஜ லீடரை தீர்த்துக்கட்ட சதி! மம்தா ஊரில் ஷாக் | Bengal Bandh | Kolkata doctor case | pr

'பந்த்'தில் பாஜ லீடரை தீர்த்துக்கட்ட சதி! மம்தா ஊரில் ஷாக் | Bengal Bandh | Kolkata doctor case | pr

கொல்கத்தா பெண் டாக்டர் சம்பவத்துக்கு நீதி கேட்டும், முதல்வர் மம்தா பதவி விலக கோரியும் கொல்கத்தாவில் மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து 12 மணி நேர பந்த் போராட்டத்துக்கு பாஜ அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் இன்று நடந்தது. ஆங்காங்கே பாஜவினர் மறியல் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். முழு அடைப்பு போராட்டத்தை பார்வையிட காரில் வந்த பாஜ மூத்த நிர்வாகி பிரியங்கு பாண்டே காரை மர்ம கும்பல் வழிமறித்து தாக்கியது. அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், மர்ம ஆசாமிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை