உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெசன்ட் நகர் பீச்சில் அதிகாரிகள் அதிரடியால் பரபரப்பு Besant Nagar Beach shops vs Chennai Corporatio

பெசன்ட் நகர் பீச்சில் அதிகாரிகள் அதிரடியால் பரபரப்பு Besant Nagar Beach shops vs Chennai Corporatio

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும்விதமாக, மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கினர். கடைக்காரர்கள் தாங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நாங்கள் வந்து அகற்றுவோம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இன்று காலை ஜேசிபி உடன் வந்து ஆக்கிரமிப்புகடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ