#BREAKING நடிகர் அல்லு அர்ஜுனுக்கு விசாரணை கோர்ட் ஜாமின்!
ஐதராபாத் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த சம்பவம் இந்த வழக்கில் புஷ்பா-2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது நிரந்தர ஜாமின் பெற விசாரணை கோர்ட்டை அணுக ஐகோர்ட் அறிவுறுத்தி இருந்தது. அல்லு அர்ஜுன் கோரிக்கை ஏற்று நாம்பள்ளி விசாரணை நீதிமன்றம் நிரந்தர ஜாமின் வழங்கி உள்ளது. டிசம்பர் 4ல் ஐதராபாத் தியேட்டரில் -புஷ்பா 2 சிறப்பு காட்சி பார்க்க அல்லு அர்ஜுன் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் இறந்தார்
ஜன 03, 2025