உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரவோடு இரவாக வனத்துறை ஆபீஸில் நடந்தது என்ன? உறவினர்கள் பகீர் தகவல் | udumalpet | Forest Department

இரவோடு இரவாக வனத்துறை ஆபீஸில் நடந்தது என்ன? உறவினர்கள் பகீர் தகவல் | udumalpet | Forest Department

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை மலை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, வயது 45. செவ்வாயன்று மாலை மூணாறுக்கு பஸ்சில் சென்ற இவரை சிறுத்தை பல் கடத்தியதாக கேரள வனத்துறையினர் கைது செய்தனர். தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்காக உடுமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அலுவலர்கள் வெளியே சென்றனர். அப்போது கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்ற மாரிமுத்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. வன ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !