சப் கலெக்டரிடம் MLA வாக்குவாதம்! Bribe | MLA Nehru allegation | Puducherry
புதுச்சேரியில் அரசியல்வாதிகள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைவரும் லஞ்சம் வாங்குவதாக, சுயேட்சை எம்எல்ஏ நேரு புகார் தெரிவித்து உள்ளார். லஞ்ச, ஊழலை தடுக்க வேண்டுமென அவர், பொதுநல அமைப்புகளுடன், கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது அவரிடம், பல்வேறு குற்றச்சாட்டுகளை நேரு முன் வைத்தார். இங்கு யாரும் லஞ்சம் வாங்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா என சப் கலெக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் எல்லாரும் லஞ்சம் வாங்கவே செய்கின்றனர் என்று பதில் அளித்தார்.
ஜூலை 06, 2024