பாஜ நிர்வாகி மீது புகார் கோவையில் பரபரப்பு சம்பவம் | Coimbatore Bjp Functionary Karthikeyan
கடையில் பெண்களை வைத்து ஷட்டரை மூடிய பாஜ நிர்வாகி சிசிடிவி ஷாக்கிங் கோவை, பேரூரில் சிமெண்ட் கடை நடத்தி வருபவர் கணேஷ்குமார். சென்னையிலும் இவர் ஒரு சிமெண்ட் கடையை நடத்தி வருகிறார். பேரூரில் உள்ள கடையை அவர் மனைவி மைதிலி கவனிக்கிறார். கடையில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றும்போதும் இறக்கும்போதும் தூசி வெளியே பறப்பதால் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள், வீடுகளில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மைதிலியிடம் வேடப்பட்டி பா.ஜ மண்டல தலைவர் கார்த்திகேயன் புகார் கூறினார். இது தொடர்பாக, கடைக்கு வந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி உரிமையாளர் மைதிலியிடம் வாக்குவாதம் செய்தார். இந்தப் பிரச்னைக்கு நீங்க ஒரு முடிவு கட்டலைன்னா, நாங்க கடையை இழுத்து பூட்ட வேண்டியிருக்கும் என சொன்னார்.