/ தினமலர் டிவி
/ பொது
/ கைது செய்யப்பட்ட வடமாநில நபர்களிடம் கைத்துப்பாக்கி பறிமுதல்! Chain Snatching | Women Attacked
கைது செய்யப்பட்ட வடமாநில நபர்களிடம் கைத்துப்பாக்கி பறிமுதல்! Chain Snatching | Women Attacked
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள எஸ்எல்வி நகரில் சுப்ரமணியம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை அவரது மனைவி மேரி ஜூலியா கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த 3 நபர்கள் மேரியிடம், சிப்ஸ் பாக்கெட் கேட்டுள்ளனர். அதனை எடுக்க மேரி திரும்பிய போது, நொடிப்பொழுதில் ஒருவன் சம்மட்டியால் மேரியின் தலையில் தாக்கினான். ரத்த வெள்ளத்தில் அலறிய மேரியின் வாயிலும் தாக்கி உள்ளான். மேரி நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அணிந்திருந்த செயின், தோடு ஆகியவற்றை பறித்து கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பினர்.
செப் 01, 2025