மக்கள் தொகையை அதிகரிக்க சட்டம் கொண்டுவரும் ஆந்திரா
ஆந்திராவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லி வருகிறார். இதை ஊக்குவிக்கும் வகையில், அதிக குழந்தைகள் பெற்று கொள்பவர்களுக்கே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு திட்டமிட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஒரு காலத்தில், 2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை தடுக்கும் சட்டம் இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.
ஜன 16, 2025