சென்னை ஏர்போர்ட்டில் கூட்டம்: ஃப்ளைட் இன்றி பயணிகள் அவதி | chennai airport | domestic flight
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சொந்த வாகனங்கள், பஸ், ரயில்கள் மூலமாக மட்டுமல்லாமல், விமானங்கள் மூலமும் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் விமான நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் எல்லா டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணித்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு செல்லத் துவங்கினர்.