உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்ணின் கை கிழிந்தது போலீஸ் மீது பகீர் புகார் | Chennai Corporation | sanitation workers protest

பெண்ணின் கை கிழிந்தது போலீஸ் மீது பகீர் புகார் | Chennai Corporation | sanitation workers protest

பணிநிரந்தரம் செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் இன்று திடீரென அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவைப் போலவே போலீசார் வந்து, தூய்மைப்பணியாளர்களை குண்டு கட்டாக கைது செய்யத் துவங்கினர். அப்போது, தூய்மைப் பணியாளர்களை போலீசார் தள்ளிவிட்டனர். இதில் சில தூய்மைப்பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. கை கிழித்து ரத்தம் கொட்டுவதைக் காட்டிய ஒரு பெண், நாங்க என்ன திருடர்களா? அமைதியாக உட்கார்ந்து எங்கள் பிரச்னைகள் பற்றி பேசக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா? என கேட்டார்.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி