தினமலர் செய்தி எதிரொலியாக உதவி கமிஷனரிடம் விசாரணை | Chennai police commissioner | SHRC
சென்னை போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை கமிஷன் சம்மன்! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலையில் ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, அருண் நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவின்படி, வடசென்னை முழுவதம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரவுடிகளின் வீட்டுக்கே சென்று, மீண்டும் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். திருவொற்றியூரில் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்ற உதவி கமிஷனர் இளங்கோவன், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால், கை, கால் உடைக்கப்படும் அல்லது என்கவுன்டர் வரை செல்லும் என்று எச்சரித்தார்.