உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசாரிக்க சென்ற எஸ்ஐ; இரவில் நடந்தது என்ன? | Chennai Police | Lady SI | TP Chathiram Police

விசாரிக்க சென்ற எஸ்ஐ; இரவில் நடந்தது என்ன? | Chennai Police | Lady SI | TP Chathiram Police

சென்னை டி.பி சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட பகுதியில் பெண் ஒருவர் ரகளை செய்வதாக நேற்று இரவு புகார் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற எஸ்,ஐ கலைச்செல்வி விசாரித்தார் . மது போதையில் பெண் ஒருவர் அவரது குழந்தையை தாக்கி, தடுக்க வந்தவர்களையும் தாக்கி கொண்டு இருந்தார். கலைச்செல்வி அந்த பெண்ணை தடுக்க சென்றார். நிலையாக நிற்க முடியாமல் தகராறு செய்து கொண்டு இருந்த அந்த பெண்ணின் ஆடைகளை சரி செய்ய முயன்றார். அப்போது கலைச்செல்வி சுதாரிக்கும் முன் அவரது முடியை பிடித்து கீழே தள்ளி அந்த பெண் தாக்க தொடங்கினார். சுதாரித்து எழுந்த கலைச்செல்வி சக போலீசாரை அழைத்து அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி