உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் மக்கள் அவதி Chennai rain | flood | rain water logged

மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் மக்கள் அவதி Chennai rain | flood | rain water logged

சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது. பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேல்மாநகர் ஆதிதிராவிட நலப் பள்ளி வளாகத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். பூந்தமல்லி நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட மேல்மாநகர் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைபட்டதால் கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசியது.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை