உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளுத்துவாங்கும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை | Schools holiday | Heavy Rainfall

வெளுத்துவாங்கும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை | Schools holiday | Heavy Rainfall

தமிழக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு லீவு தேர்வுகள் ஒத்திவைப்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாளை கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் மழை வெளுத்துவாங்கும். முன்னெச்சரிக்கையாக, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !