25 ஊரில் புரட்டியடிக்கும் கனமழை-முக்கிய அப்டேட் chennai rain|tn weather today imd heavy rain alert
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் இப்போது அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தென்மேற்கு வங்க கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல் தென்னிந்திய பகுதிகளின் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பரவலாக கன மழை கொட்டித்தீர்க்கும். குறிப்பாக திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும். புதன்கிழமை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும்; வியாழக்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்க்கும். இதே போல் வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், காரக்காலில் கனமழை பெய்யும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை பொறுத்தவரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.