/ தினமலர் டிவி
/ பொது
/ மின்சார ரயில் சேவை ரத்தானதால் பஸ்களில் அலைமோதும் கூட்டம்! Chennai Train Service Cancelled
மின்சார ரயில் சேவை ரத்தானதால் பஸ்களில் அலைமோதும் கூட்டம்! Chennai Train Service Cancelled
பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரம் கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை 14ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் பல்லாவரம் - கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனினும் பயணிகள் சிரமத்தை போக்க, தாம்பரம் - செங்கல்பட்டு, தாம்பரம் - பிராட்வே உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் கூடுதலாக 70 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையின் நுழைவாயிலாக திகழும் தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தானதால், உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளும் நகரின் பிற இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆக 05, 2024