/ தினமலர் டிவி
/ பொது
/ உடனே பணிக்கு திரும்புங்க! சென்னை மாநகராட்சி அழைப்பு | Chennai Corporation | Workers Strike
உடனே பணிக்கு திரும்புங்க! சென்னை மாநகராட்சி அழைப்பு | Chennai Corporation | Workers Strike
குப்பை சேகரிப்பு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை சுட்டிக்காட்டி வேலைக்கு திரும்புமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பணிகளை தனியாருக்கு வழங்கினாலும் எந்தவொரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை. இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆக 12, 2025