உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு காரணம் என்ன? | House rent in Chennai | Chennai Rental House |

காலி வீடுகளுக்கும் கடும் தட்டுப்பாடு காரணம் என்ன? | House rent in Chennai | Chennai Rental House |

சென்னையில் ஷாக் தரும் வீட்டு வாடகை! காணாமல் போன டூலெட் போர்டு! டிஸ் : கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் சென்னைக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. சென்னையின் மையப்பகுதி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் மக்கள் அதிகம் குடியேறுகின்றனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல இடங்களில் இருந்து, லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக தினமும் வந்து செல்கின்றனர். ஓரளவுக்கு வருவாய் உயரும் நிலையில், சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேற விரும்புகின்றனர். ஐடி , கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களை ஒட்டிய பகுதிகளில் வாடகை வீடு பெற கடும் போட்டி ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் வாடகையை வெகுவாக உயர்த்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஏப்ரல் மே மாதங்களில் வாடகை வீடுகளுக்கு இயல்பாகவே அதிக கிராக்கி இருக்கும். வேலை செய்யும் இடம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் வீடு மாற முயற்சிப்பதே இதற்கு காரணம்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை