உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது! | Nellai | Cheranmahadevi | engineering college

நெல்லையில் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது! | Nellai | Cheranmahadevi | engineering college

திருநெல்வேலி சேரன்மகாதேவி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இங்கு மின்னணுவியல் துறை துணை பேராசிரியராக பணி புரிந்தவர் சாமுவேல் ராஜ் வயது 37. கல்லூரியின் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சென்ற 3ம் தேதி இண்டஸ்ட்ரியல் சுற்றுலாவுக்காக கேரள மாநிலம் மூணாறு சென்றுள்ளனர். சாமுவேல் ராஜ், 2 பெண் பேராசிரியர்கள், 16 மாணவிகள் மற்றும் 29 மாணவர்கள் சென்று திரும்பி உள்ளனர். சுற்றுலாவின் போது சாமுவேல் ராஜ் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா சென்று வந்த பிறகு சக மாணவர்களுக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ