/ தினமலர் டிவி
/ பொது
/ அனுமதியின்றி மதபிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! Christian Missions | Hindus
அனுமதியின்றி மதபிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! Christian Missions | Hindus
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர் பகுதிக்கு 20 ஆண்கள், 8 பெண்கள் கொண்ட குழுவினர் வந்தனர். பூட்டி இருந்த வீடுகளுக்கு முன்பு பைபிள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வைத்தனர். அப்பகுதி மக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மக்களில் சிலர் எதற்காக இதை தருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மதம்மாற்ற முயற்சி செய்கிறீர்களா என சிலர் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 28 பேரையும் சிறைபிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பிப் 09, 2025
மேலும் கருத்துகள்