உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாதிரியார் திமுக ஏஜெண்ட் போல பேசுவதா? தவெகவினர் எதிர்ப்பு | Church Sermon Controversy |Vijay

பாதிரியார் திமுக ஏஜெண்ட் போல பேசுவதா? தவெகவினர் எதிர்ப்பு | Church Sermon Controversy |Vijay

துாத்துக்குடி, வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சர்ச்சில், ஞாயிறன்று சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் அலாய்சியஸ் முன்னிலையில், திருநெல்வேலி செயின்ட் சேவியர்ஸ் கல்லுாரி முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அவர் பேசுகையில், நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். 41 பேரை கொன்று குவித்தவனுக்கு பின்னால் செல்வது ஏன்? என சர்ச்சையாக பேசினார். breath பாதிரியார் காட்வின் ரூபஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த த.வெ.க., தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் தெரிவித்தனர். சர்ச்சை, அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் வீடியோ வெளியிட வேண்டும் என இளைஞர்கள் முறையிட்டனர். ஒரு வழக்கு சி.பி.ஐ., விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதுாறு பரப்புவது, உள்நோக்கத்துடன் செயல்படும் கிரிமினல் குற்றம் என அவர்கள் குற்றஞ்சாட்டினர். பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தி.மு.க., ஏஜன்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என, த.வெ.க., தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர்.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை