உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் CM Cell Petition | Covai | Sulur

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் CM Cell Petition | Covai | Sulur

கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தென்றல் நகர் உள்ளது. அங்கு கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம், சாலை வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். முதல்வர் தனிப்பிரிவுக்கும் பத்துக்கும் மேற்பட்ட முறை புகார் மனு அனுப்பி உள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும் என குறுஞ்செய்தி மட்டும் வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்கள் புலம்புகின்றனர். இதனால் புகார் மனுவை பிளக்ஸ் பேனராக மாற்றி அப்பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் கூறினர்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ