/ தினமலர் டிவி
/ பொது
/ பாஜவினர் கொந்தளிப்பு கோவையில் பரபரப்பு | coimbatore BJP | coimbatore police crime
பாஜவினர் கொந்தளிப்பு கோவையில் பரபரப்பு | coimbatore BJP | coimbatore police crime
கோவை, வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). ஆர்.எஸ்.புரம் பகுதி பா.ஜ இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ மார்க்கெட்டில் உள்ள ஆர்எஸ்புரம் பாஜ அலுவலகத்தில் நேற்றிரவு உட்கார்ந்திருந்தார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் அவரது 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆக 28, 2024