உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் | Ukkadam to Athupalam bridge | Coimbatore

மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் | Ukkadam to Athupalam bridge | Coimbatore

பாலத்தில் இருந்து திருச்சி சாலையில் வெளியேறும் பாதை பணிகள் இன்னும் முடியாததால் அனைத்து வாகனங்களும் மீண்டும் உக்கடம் பஸ் ஸ்டாண்டு முன்பு இறங்குகின்றன. ஒட்டுமொத்த வாகனங்களும் உக்கடம் ஜங்ஷனுக்கு வந்து செல்வதால் மேம்பாலம் திறந்தும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேரளா, பழனி பொள்ளாச்சியி, ராமநாதபுரம், செல்வபுரம், ஒப்பணக்கார வீதி டவுன்ஹால் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. டிராபிக் போலீசார் போக்குவரத்தை சரி செய்தாலும் தொடர்ந்து அதிகரிக்கும் வாகனங்களால் கடும் நெரிசலில் உக்கடம் சிக்கி தவிக்கிறது. முன்பு அந்த சாலையை கடந்து செல்ல 30 நிமிடங்கள் ஆன நிலையில், 481 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தால் 7 நிமிடங்களில் கடந்து விடலாம் என கூறப்பட்டது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை