உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்டி கொடுத்த செம்பு கம்பி: டிரான்ஸ்பார்மர்களை தூக்கும் கும்பல் சிக்கியது எப்படி?

காட்டி கொடுத்த செம்பு கம்பி: டிரான்ஸ்பார்மர்களை தூக்கும் கும்பல் சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 2 ஆண்டுகளாக டிரான்ஸ்பார்மர்களை சிதைத்து செம்பு கம்பிகள் திருடப்பட்டு வந்தன. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ செப்பு கம்பிகள் திருடுபோனதை அடுத்து சிங்கம்புணரி, உலகம்பட்டி, நெற்குப்பை, எஸ்.வி மங்களம், எஸ்எஸ் கோட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த நிலையில் எஸ்எஸ் கோட்டை போலீசார் முத்துசாமிப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு மினிவேன் வந்தது. அதில் 2 சிறுவர்களும், 2 இளைஞர்களும், 76 வயது முதியவரும் இருந்தார். அவர்களுடைய வாகனத்தில் செம்பு கம்பிகள் இருந்தது குறித்து விசாரித்த போது, முறையான பதில் வரவில்லை. அதனால் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள்தான் செம்பு கம்பிகளை திருடிவந்தது தெரியவந்தது.

ஜூன் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை