விஷயத்தை கேள்விப்பட்டு தாய் எடுத்த விபரீத முடிவு | 10th Student dead| Vadaloor| Cuddalore| EPS
தலையில் பாய்ந்த ஈட்டி மாணவனுக்கு நேர்ந்த கதி! கடலூர் மாவட்டம் வடலுார் தர்ம சாலையை சேர்ந்தவர் திருமுருகன். நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மூத்த மகன் கிஷோர் வயது 15 வடலூர் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சிலம்ப போட்டியில் ஆர்வமுடைய கிஷோர், மாநில அளவிலான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். கடந்த 24ம் தேதி மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு ஈட்டி எறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது சக மாணவர் ஒருவர் எறிந்த ஈட்டி, மைதானத்தில் நின்றிருந்த கிஷோர் தலையில் குத்தியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கிஷோரை ஆசிரியர்கள் உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கிஷோர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதித்தனர். கிஷோர் மூளைச்சாவு அடைந்ததை கேட்டு, மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, பிளீச்சிங் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.